search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் எரிப்பு"

    கோட்டக்குப்பம் அருகே பா.ஜனதா பிரமுகர் மோட்டார் சைக்கிள் நள்ளிரவில் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் சோதனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 38). மீனவரான இவர் பா.ஜனதா கிளை தலைவராக உள்ளார்.

    சம்பவத்தன்று நள்ளிரவு அவரது வீட்டில் வெளியே பலத்த சத்தம் கேட்டது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜயன் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்தது.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விஜயன் தகவல் தெரிவிக்கவே கோட்டக்குப்பம் போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது விஜயன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவம் அறிந்து பா.ஜனதா பிரமுகர்கள் தங்க. சிவகுமார், மாநில மீனவர் அணி செயலாளர் விநாயகம் உள்ளிட்ட பலர் அவரது வீட்டிற்கு வந்து ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும் பா.ஜனதாவினர் திரண்டு கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராபின்சனிடம் குற்றவாளிகளை கைது செய்ய கோரி புகார் அளித்தனர். மேலும் இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோட்டக்குப்பத்தில் கடந்தாண்டு அ.தி.மு.க. நகர செயலாளர் கணேசன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மர்மநபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி எரித்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் விஜயன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோட்டக்குப்பத்தில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

    ×